ini ellame nee allavo, rc novel, ini ellame neeyallavo novel @tamilbookstore.in

Ini Ellame Nee Allavo Novel Ramanichandran

  • Post author:
  • Post comments:0 Comments

‘Ini Ellame Nee Allavo’ means you are not everything now. This is the work of Ramanichandran. Ramanichandran started the era of the Tamil romantic novel by flagging it in Tamil. She has worked for Tamil literature for 5 decades.

Ini Ellame Nee Allavo by RC

Name of Book :Ini Ellam Neeyllavo
Writer                      :Ramanichandran
Language                :Tamil
Genre                      :Drama / Fiction
Pages                      :144 Papers
Format                    :eBook / ePub / Kindle epub
Rate by Category :4.1
Book Details

Description of Novel

தோற்றம்‌! கூடவே, இன்னும்‌ ஏதோ புரியாதது போன்ற சிறு உறுத்தல்‌! எதையும்‌ முனைந்து கேட்கத்‌ தோன்றாமல்‌, அப்படியே அமர்ந்திருந்தாள்‌, சந்தனா… சற்றுக்‌ கவலையுடன்‌ எதிர்‌ வீட்டுக்காரர்‌ எட்டிப்‌ பார்க்கும்‌ போதே, ஆவி பறக்கும்‌. டீக்கப்புடன்‌ எதிர்‌ வீட்டுக்‌ கனகம்‌ வந்து சேர்ந்தாள்‌! பின்னோடு, ஒரு ட்ரேயில்‌ இன்னும்‌ சில கப்புகளுடன்‌, சுதாகரன்‌…

சந்தனாவிடம்‌ முதல்‌ கப்பைக்‌ கொடுத்துவிட்டு, மீனாட்சியைப்‌ பார்த்து.
குடியுங்கள்‌!” என்று, அவளிடமும்‌ ஒரு கப்பை நீட்டினாள்‌.

“சந்தனாதான்‌ முக்கியம்‌! ஆனால்‌, எனக்கும்‌ தேவை போலத்தான்‌ தோன்றுகிறது! நன்றி!”
என்று கப்பை வாங்கிக்‌ குடித்தாள்‌ மீனாட்சி.

குடித்தபடியே, சந்தனாவின்‌ முகத்தைப்‌ பார்த்து, “என்னம்மா, எப்படி உன்‌ வீட்டைக்‌ கண்டு.
பிடித்தேன்‌ என்று குழப்பமாக இருக்கிறதா? பள்ளிக்‌ கவரில்தானே பர்சைப்‌ போட்டுப்‌ பாக்‌
பண்ணியிருந்தாய்‌! நேரே, உன்‌ பள்ளிக்குப்‌ போனேன்‌, உன்‌ பெயரைத்தான்‌.

மருத்துவமனையில்‌ அந்தப்‌ பெண்‌ வாங்கி வைத்திருந்தானே! பள்ளியில்‌ உன்‌ பெயரைச்‌
சொன்னதுமே. வீட்டு முகவரியைத்‌ தந்தார்‌: இப்போது, கொஞ்சம்‌ பரவாயில்லையாம்மா? என்னென்ன போயிருக்கிறது என்று யோசித்துப்‌ பார்க்கிறாயா? போலீசுக்குத்‌ தெரியப்படுத்தும்‌ போது கேட்பார்கள்‌…” என்றாள்‌.

இனிப்பான டீ உள்ளே போகவும்‌, சந்தனாவுக்குப்‌ பழைய தெம்பு, ஓரளவு திரும்பியது போல:
இருந்தது!

சற்று யோசித்து விட்டு, மீனாட்சியின்‌ கேள்விக்குப்‌ பதிலாக, “பெரிதாகத்‌ திருட்டுப்‌ போக,
வீட்டில்‌ ஒன்றும்‌ கிடையாது! வீட்டைக்‌ காலி செய்வதால்‌, தங்கம்‌, வெள்ளி எல்லாம்‌ பாங்க்‌
லாக்கரில்‌ வைத்து விட்டோம்‌! இன்றைக்குப்‌ பணமும்‌ வீட்டில்‌ வைத்திருக்கவில்லை! ஒன்றும்‌.
கிடைக்காத ஆத்திரத்தில்தான்‌, திருடன்‌ இப்படி வீசி எறிந்திருக்கிறான்‌ என்று தோன்றுகிறது!”
என்றாள்‌ சந்தனா மெதுவாக.

“அதுவும்‌ நல்ல காலம்‌ தான்‌…” என்று எதிர்‌ வீட்டுக்‌ கனகம்‌ சொல்லிக்‌ கொண்டிருக்கும்‌ போதே,
மகள்‌ சுந்தரியின்‌ குரல்‌ அழைக்கவும்‌. “இதோ வந்துவிட்டேன்‌ கண்ணு” என்றவாறு, தன்‌.
வீட்டுக்குள்‌ விரைந்தாள்‌ அந்த அம்மாள்‌.

கைக்‌ கடிகாரத்தைப்‌ பார்த்துவிட்டு மெல்ல எழுந்த மீனாட்சி அம்மாள்‌, நின்று
யோசனையோடு பார்க்கையில்‌, “ஒன்றும்‌ போகவில்லை என்றால்‌, போலீசுக்குப்‌.
போவானேன்‌? சுந்தரி வீட்டு மனிதர்கள்‌ வந்து கொண்டு இருப்பதாகத்‌ தகவல்‌ வந்தது! அவர்கள்‌.

இங்கே இருக்கும்‌ போது போலீஸ்காரர்கள்‌ வருவதும்‌, போவதுமாக… ஏற்கனவே. ஒருதரம்‌
பட்டாயிற்று! இப்போது எதற்கு சந்தனா?” என்றார்‌ எதிர்‌ ஃப்ளாட்டுக்காரர்‌!.

அவள்‌ தனியே இருப்பதால்‌, சும்மாச்‌ சும்மா தன்னையல்லவா கூப்பிடுவார்கள்‌ என்றும்‌ அவர்‌.
தயங்குவது. சந்தனாவுக்குப்‌ புரிந்தது! சுந்தரியுடைய

Conclusion

Read the novel ‘Ini Ellam Neeyllavo’ and write a review for it on the comment box below.

Leave a Reply