kanavu meipada vendum, kanavu meipada vendum novel @tamilbookstore.in

Kanavu Meipada Vendum Ramanichandran Novel

  • Post author:
  • Post comments:0 Comments

The novel ‘Kanavu Meipada Vendum’ begins with the heroine ‘Maitreyi’ getting excited for her interview. Maitreyi’s mother ‘Sivagami’ also helps her get out. The title of this novel means The dream must come true. The novel has a 147-pages, 23-chapters and its a romance genre.

Kanavu Meipada Vendum Ramanichandran Novel

Name of Book :கனவு மெய்பட வேண்டும்
Writer                      :Ramanichandran
Language                :Tamil
Genre                      :Fiction / Tamil Novel
Pages                      :170 Papers
Format                    :eBook / ePub / Kindle epub
Rate by Category :4.5
Book Details

Kanavum Kadhalum

அதே போல, அவளுக்காக காரை அனுப்புவதையும்‌, சந்தனா ஒப்புக்கொள்ளவில்லை.. ஏனெனில்‌, மீனாட்சியின்‌ பார்வைக்கான காகிதங்கள்‌, காரில்‌ அனுப்பப்படுவது இல்லை.
என்று அதற்குள்‌ அவள்‌ கண்டுபிடித்திருந்தாள்‌. ரகசியமான குறிப்புகள்‌ கூரியர்‌ மூலமும்‌:
மற்றவை, அந்தப்‌ பகுதியில்‌ இருந்து மருத்துவமனைப்‌ பணிகுச்‌ சென்று வரும்‌ ஒருவரிடமும்‌:
அனுப்பப்பட்டன. திருப்பி அனுப்புவதும்‌, அப்படித்தான்‌.

“எனவே, பள்ளிக்குச்‌ செல்வதற்கும்‌. திரும்பி வருவதற்கும்‌ வேன்‌ ஒன்றில்‌ ஏற்பாடு செய்து
கொண்டாள்‌.

தடுக்க மாட்டாமல்‌, “ஆனாலும்‌, உனக்குக்‌ கொஞ்சம்‌ அதிகப்படியான சுதந்திர புத்திதான்‌!
உன்‌ அப்பா உன்னைப்‌ பிடிவாதக்காரியாக வளர்த்து விட்டார்‌!” என்று மீனாட்சி குறைப்பட்ட
போது, “இல்லாவிட்டால்‌, இந்தக்‌ காலத்தில்‌ வாழவே முடியாது ஆன்ட்டி! நசுக்கி விடுவார்‌.
தைரியம்‌, புருஷ லட்சணம்‌ மட்டுமல்ல, இப்போது பெண்கள்‌ லட்சணமும்‌ கூடத்தான்‌!” என்று
சந்தனா சிரிக்க, மற்றவளும்‌ தன்னை மீறிப்‌ புன்னகை செய்தாள்‌!

‘இரு பெண்களுக்கும்‌, வயது வேற்றுமையை மீறிப்‌ பல விஷயங்களில்‌ மனம்‌ ஒத்துப்‌:
போயிற்று! பொது விஷயங்களில்‌, உணவுச்‌ சுவையில்‌… இலகுவாகப்‌ பேசியபடி காலாற நடப்பதில்கூட!

“பெஞ்சில்‌ ஏற்றுவது’ என்று, மீனாட்சி கூறிய அப்போதிலிருந்தே, அவளுக்கு நகைச்சுவை
உணர்வு இருக்கிறது என்ற ஊகம்‌, சந்தனாவுக்கு இருந்தது! அவளுடைய தந்தையும்‌, மகளுக்குச்‌ சிரிக்கக்‌ கற்றுக்‌ கொடுத்திருந்தார்‌!

எனவே. வீட்டில்‌ அடிக்கடி சிரிப்புச்‌ சத்தம்‌ கேட்கலாயிற்று! ஒரு நாள்‌ பன்னி வீட்டுப்‌ பாட நோட்டுப்‌ புத்தகத்தைத்‌ திருத்திக்‌ கொண்டிருந்த சந்தனா, திடுமென வாய்விட்டுச்‌ சிரித்தாள்‌!

கேள்வியாக நோக்கிய மீனாட்சியிடம்‌, “ஒன்றுமில்லை, ஆன்ட்டி! குறிக்கோளை அடைய
என்னென்ன செய்ய வேண்டும்‌ என்று கேள்வி. இவன்‌. முதலில்‌ நாம்‌ தாயாராக வேண்டும்‌
என்று எழுதியிருக்கிறான்‌.” என்று விளக்கவும்‌ “தயார்‌. தாயாராகிவிட்டதா?” என்று மூத்தவளும்‌ சேர்ந்து நகைத்தாள்‌.

அதே போலச்‌ சந்திரனில்‌ பேசினால்‌ கேட்காது. ஏன்‌ என்று கேட்டால்‌, பேசுவதற்கு அங்கே.
மனிதர்கள்‌ இல்லாததுதான்‌ காரணம்‌ என்று பதில்‌ சொன்ன புத்திசாலியைப்‌ பற்றி, ஒருநாள்‌.
சந்தனா மீனாட்சியிடம்‌ விவரித்தாள்‌.

“ஓலி பயணம்‌ செய்யத்‌ தேவையான காற்று இல்லாததால்‌ தான்‌ என்று சொல்லிக்‌
கொடுத்தாலும்‌, ஒத்துக்‌ கொள்ளாமல்‌ எப்படியும்‌ பேசுவதற்கு மனிதர்கள்‌ இருந்தால்‌ தானே.
அவர்கள்‌ பேசுவது கேட்கும்‌ என்று அதிலேயே நிற்கிறாள்‌.

ஆன்ட்டி! சொல்லிச்‌ சொல்லிப்‌ பார்த்து, அலுத்துப்‌ போய்‌, காற்று பற்றி எழுதினால்‌, மதிப்பெண்‌ கிடைக்கும்‌ மற்றது எழுதினால்‌ முட்டை கிடைக்கும்‌ என்ற பிறகுதான்‌, அவள்‌ ஓரளவு வழிக்கு வந்தாள்‌, ஆன்ட்டி!

eBook Link

Suggestion
  • En uyire neethane
  • Kadhal Vaibogame
  • Kadhal vantha velaiyile
  • Kannethirey Thondrinaal
Conclusion

We hope you will read the novel ‘கனவு மெய்பட வேண்டும்’ to know about RC’s style. If you want to share any review about book just comment below.

Leave a Reply