irulukku pin varum jothi novel, irulukku varum jothi @tamilbookstore.in

Irulukku Pin Varum Jothi RC Novel

  • Post author:
  • Post comments:0 Comments

‘Irulukku Pin Varum Jothi’ is a 2001 novel by Ramanichandran. The novel was published by Arunodayam Publishers. This fiction book belongs to the genre of romantic and family novels. Ramanichandran, who has written more than 170 novels, is a role model for modern women who can write a Tamil romantic novel on Kindle.

Irulukku Pin Varum Jothi Novel

Name of Book :Irulukku Pin Varu Jyothi
Writer                      :Ramanichandran
Language                :Tamil
Genre                      :Fiction / Tamil Novels
Pages                      :148 Papers
Format                    :eBook / ePub / Kindle epub
Rate by Category :4.1
Book Details

Irulum Jothiyum

எதிர்‌ வீட்டுப்‌ பெண்மணியும்‌, அதற்குச்‌ சாதகமாகப்‌ பேசினாள்‌ என்பது நிம்மதியைத்‌ தந்தது. ‘இல்லையென்றால்‌, நல்லது நினைக்கும்‌ ஒருத்தியை எதிர்த்துக்‌ கொண்டு வந்தோமே என்று, அவளுக்கு உறுத்தியிருக்கும்‌.

ஆனால்‌, அவளது ஒப்புதல்‌, சந்தனாவுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைத்‌ தரவே, புது
இடத்துக்குப்‌ போகிறோம்‌ என்கிற உணர்வே இல்லாமல்‌, காரிலேயே, அவளுக்குத்‌ தூக்கம்‌.
வந்து விட்டது.

“அதிர்ச்சியின்‌ பின்‌ விளைவு!” என்று மீனாட்சி சொன்னது, லேசாகக்‌ காதில்‌ விழுந்தது.
அப்புறமாக, அண்ணா நகரில்‌ மீனாட்சி அம்மாளின்‌ வீட்டு வாயிலில்‌, அவள்‌ எழுப்பியது தான்‌. சந்தனாவுக்குத்‌ தெரியும்‌. அவ்வளவு ஆழ்ந்த தூக்கம்‌!

மீனாட்சி அம்மாளின்‌ வற்புறுத்தலுக்காக இரண்டு தோசைகளை விழுங்கி விட்டுப்‌ பழக்க:
தோஷத்தில்‌ பல்லைத்‌ துலக்கி, அவளுக்கென்று கொடுக்கப்பட்ட அறையில்‌ கிடந்த
படுக்கையில்‌ விழுந்தவள்‌, மீண்டும்‌ சில மணி நேரம்‌, உலகை மறந்து உறங்கினாள்‌. அதன்‌ பிறகு… அந்தக்‌ கனவு!

ஏதோ ஒரு பயணம்‌! சந்தனாவும்‌, அவளுடைய தந்தையும்‌ சந்தோஷமாகப்‌ போய்க்‌ கொண்டிருக்கிறார்கள்‌!. வண்ண வண்ணப்‌ பூக்களுடன்‌ கூடிய செடிக்‌ கொடிகளும்‌, மரங்களும்‌ நிறைந்த மலையில்‌, அவற்றை ரசித்தபடி, ஆனந்தமாக ஏறிப்‌ போகிறார்கள்‌!

திடுமென பேய்மழையுடன்‌ சூறைக்காற்று எங்கிருந்தோ வீசக்‌ கண்‌ மண்‌ தெரியாமல்‌ ஓடுகிறார்கள்‌! ஓடிக்‌ கொண்டே பார்த்தால்‌, அவள்‌ மட்டுமாய்த்‌ தனியே ஓடிக்‌ கொண்டு
இருக்கிறாள்‌! அவருக்கு என்னவோ ஆகிவிட்டது என்று தெரிகிறது!

அந்த இருட்டு, மழையில்‌ பதறிக்‌ கொண்டு, தந்தையைத்‌ தேடுகிறாள்‌! திடுமென அவரது திகைத்த முகம்‌ மட்டும்‌ தூரத்தில்‌ தெரிகிறது! ரத்தக்‌ காயங்களுடன்‌! ஓடி அவரை அடைகிற வேகத்தில்‌ கீழே விழுந்து, உடல்‌ நடுங்க எழுந்து அமர்ந்த சந்தனாவுக்குச்‌ சற்று நேரம்‌, சற்றுச்‌ சூழல்‌ ஒன்றுமே புரியாத நிலை! கண்களைக்‌ கசக்கி,

‘கைகால்களை உதறி, தலையை உலுக்கி, ஒருவாறு தூக்கக்‌ கலக்கத்திலிருந்து விடுபட்ட பிறகே கனவு வேகத்தில்‌ படுக்கையில்‌ இருந்து, உருண்டு கீழே விழுந்திருப்பது அவளுக்குப்‌ புரிந்தது!

இங்கே எப்படி வந்திருக்க முடியும்‌ என்பதும்‌! இது அந்த நல்ல பெண்மணி மீனாட்சி அம்மாளின்‌ வீடு! திருட்டு நடந்த வீட்டில்‌, சந்தனா தனித்திருக்க வேண்டாம்‌ என்று, தன்‌ வீட்டுக்கு அழைத்துவந்திருக்கிறாள்‌.

Conclusion

The title of the novel ‘Irulukku Pin Varu Jyothi’ means The torch that comes after darkness. Comment below about the Ramanichandran novel you need or read.

Leave a Reply