kannethirey thondrinal, kannethirey thondrinaal novel, rc novels @tamilbookstore.in

Kannethirey Thondrinal Tamil Romance Novel

  • Post author:
  • Post comments:0 Comments

The novel ‘Kannethirey Thondrinal’ was written by Ramanichandran in 2013 and published by Arunodayam Publishers. The novel has a total of 172 pages. The author begins the story of hero Sumadarman first. The first chapter goes on to talk to his aunt about Sumadarman’s marriage. He started business newly is getting married, so he looking for bride with business partner.

Kannethirey Thondrinal Novel Description

Name of Book :கண்ணெதிரே தோன்றினாள்
Writer                      :Ramanichandran
Language                :Tamil
Genre                      :Fiction / Tamil Novel
Pages                      :147 Papers
Format                    :eBook / ePub / Kindle epub
Rate by Category :4.1
Book Details

Aval Thondriyathum

‘இப்போது ஒரு நெகிழ்வில்‌ வாயை விட்டுவிட்டு, அப்புறம்‌ ஏன்‌ சொன்னோம்‌ என்று. வருந்துவது, அன்பில்‌ விரிசல்‌ விழ வைத்துவிடும்‌! அப்படி விரிசல்‌ விழுந்து, கிட்டத்தட்ட தாய்‌.
போல எண்ணத்‌ தொடங்கியிருந்த, இந்தப்‌ பிரியமான பெண்மணியைப்‌ பிரிய நேருமானால்‌?

சந்தனாவால்‌ எண்ணிப்‌ பார்க்கக்‌ கூட முடியவில்லை! அத்தோடு, அவரவர்‌ அந்தரங்கங்கள்‌ அவரவருக்கு! இவ்வளவு அன்பிருந்தும்‌, சந்தனா” மட்டும்‌, எல்லாவற்றையும்‌ மீனாட்சி அம்மாவிடம்‌ ஒப்பித்து விட்டாளா என்ன?

முறுவலித்து, “எங்கோ ஓர்‌ இடத்தில்‌ ஒளியேற்றினால்‌ சரிதானே ஆன்ட்டி! இப்போது, நீங்கள்‌ அந்தக்‌ ‘காட்டுப்‌ பய்ல்‌’ மாதிரி, வேறு கதைகள்‌ இருந்தால்‌, சொல்லுங்களேன்‌” என்று கேட்டுக்‌ கொண்டாள்‌. “எனக்கு என்னவோ. அந்த நிகழ்ச்சி உங்கள்‌ வீட்டில்‌ தான்‌. நடந்திருக்குமோ என்கிற சந்தேகம்‌ போகவே மாட்டேன்‌ என்கிறது!” என்று, ஓரக்‌ கண்ணால்‌, குறும்பாக நோக்கினாள்‌.

சிரித்தவாறே, கையை நீட்டிச்‌ சின்னவளின்‌ கன்னத்தை வருடினாள்‌. மீனாட்சி. “அருமையான பெண்ணம்மா நீ!” என்றவள்‌, தொடர்ந்து, தான்‌ சந்தித்த வேறு சில பல வேடிக்கை நிகழ்ச்சிகளைப்‌ பற்றிச்‌ சொல்லத்‌ தொடங்கினாள்‌.

அவற்றுள்‌ ஒன்று, அவளது எட்டாம்‌ வகுப்பில்‌, ‘ஹோம்‌ சயன்ஸ்‌’ தேர்வில்‌, அவரை நல்ல. பலன்‌ தர என்ன செய்ய வேண்டும்‌ என்ற கேள்விக்கு, அவரைச்‌ செடிக்குப்‌ பதிலாக, ‘அவரை” அதாவது கணவரை என்று எடுத்துக்‌ கொண்டு, சில மாணவிகள்‌ எழுதிய பதில்‌!

இருவரும்‌ விழுந்து விழுந்து சிரித்த போது, சந்தனாவுக்கு, வீட்டில்‌ தமையன்‌, தந்தையோடு ஜோக்கடித்துச்‌ சிரிக்கும்‌ அதே உணர்வு!

மீனாட்சி அம்மா வீட்டுச்‌ சமையல்காரம்மா கூட, சந்தனாவிடம்‌ தனியே வந்து, “அம்மா
இப்படிச்‌ சிரித்து சந்தோஷமாக இருப்பதைப்‌ பார்த்து, ஏழெட்டு வருஷம்‌ ஆகிப்‌ போச்சும்மா!!
அய்யாவும்‌ போய்‌, சின்னவரும்‌ வெளிநாட்டிலேயே தங்கிவிட்ட பிறகு. ஆளே மாறிப்‌ போய்‌,
வெறும்‌ எந்திரம்‌ மாதிரி, நடமாடினாங்க. எப்படியோ, அது மாறி அவங்க நல்லா ஆனால்‌ சரி!
அதனாலே, நீ மட்டும்‌. எங்கம்மாவை விட்டு, எங்கேயும்‌ போய்விடாதேம்மா!” என்று,
கூறிவிட்டுப்‌ போனாள்‌!

‘இந்த ஆன்ட்டியை விட்டுப்‌ போவதா? நினைக்கக்‌ கூட முடியவில்லை, சந்தனாவால்‌! பெண்‌ துணையின்றி வளர்ந்தவள்‌ சந்தனா! அதனால்‌, மீனாட்சி அம்மாவை, ஒரு தாய்‌ போல
என்று அவளால்‌, ஒப்புமை கட்டி நினைக்க முடியவில்லை!

ஆனால்‌, உலகில்‌ யாருமே இல்லை என்று தன்னந்தனியே நின்றவளுக்கு, நானிருக்கிறேன்‌.
என்று, ஆதிமூலமாய்‌, அபயகரம்‌ கொடுத்தவள்‌ ஆயிற்றே! கோடி ரூபாய்‌ கொடுத்தால்‌ கூட, அந்த அபயகரத்தை விட்டுப்‌ போவதா?

eBook Link

Some of the RC’s good novels,

  • Ellam Unakkaga
  • Vaigai Perugi
  • Atharkor Neramundu
  • Velai Vantha Pozhuthu
End Notes

‘கண்ணெதிரே தோன்றினாள்’ is Ramanichandran’s new novel. She publishes 3 novels a year. There is a separate fan base for her novels in Tamil.

Leave a Reply